Home » சவூதி அரேபியா சென்ற இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

சவூதி அரேபியா சென்ற இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

by Gayan Abeykoon
December 28, 2023 8:11 am 0 comment

வடமராட்சியிலிருந்து தொழிலுக்காக சவூதி அரேபியா சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரவோடை, அல்வாய் வடக்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான விபுலகுமார் துவிகரன் (வயது-25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இம்மாதம் இரண்டாம் திகதி சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக இவர் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் இவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாமையால் மனைவி இவர் தொடர்பில் தேடிப்பார்த்ததில் சவூதியில் விபத்தொன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துவிட்டதாக மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவரது மரணம் தொடர்பான தகவல்களை உறுதிபடுத்துமாறு சவூதி தூதரகத்திடம் உறவினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நாகர்கோவில் வி​சேட. கரவெட்டி தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT