125
காத்தான்குடியில் வீசிய பலத்த காற்றினால் காத்தான்குடி மூன்றாம் குறிச்சி ஹுதா வீதியிலுள்ள வீடொன்றின் கூரை உடைந்து விழுந்ததில் இரண்டு வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம் நேற்று (27) புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி 3ம் குறிச்சி ஹுதா வீதியிலுள்ள மக்கீன என்பவரின் வீடு சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பகுதி கிராம உத்தியோகத்தருக்கு தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய கால நிலை நிலவுவதால் பலத்த காற்றும் வீசியதால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்