103
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நுவரெலியா (26) மாவட்ட செயலகத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபொடவின் வழிகாட்டலில் 2004 சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கான சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) சுஜீவ போதிமான்ன, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) தினிகா கவிசேகர, அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், நுவரெலியா பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)