Friday, March 29, 2024
Home » போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு மேலும் 7 நாட்கள் விளக்கமறியல்

போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு மேலும் 7 நாட்கள் விளக்கமறியல்

- 28 நாட்களாக விளக்கமறியலில் வைப்பு

by Rizwan Segu Mohideen
December 27, 2023 1:19 pm 0 comment

போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (27) கொழும்பு புதுக்கடை இலக்க 02 நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்திய போது நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது. உத்தரவிட்டுள்ளது.

அவரது சொற்பொழிவுக் கூட்டங்களில் பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைனய மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த டிசம்பர் 01ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக CID யில் ஆஜரான ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.

போதகர் ஜெரோம் பெனாண்டோ சில மாதங்களுக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறியிருந்ததோடு, மீண்டும் நாடு திரும்பிய வேளையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அண்மையில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான வேளை, போதகர் ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைதான போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு 14 நாள் விளக்கமறியல்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT