Friday, April 19, 2024
Home » முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் பறிமுதல்

முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் பறிமுதல்

- சுமார் 92 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்குத் தடை

by Prashahini
December 21, 2023 12:02 pm 0 comment

முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு அசங்க, லடியா மற்றும் குடு ஸ்ரீயானி ஆகியோர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சம்பாதித்த ஏராளமான பணம் மற்றும் சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணை பிரிவு அதிகாரிகள் இன்று (21) பொறுப்பேற்றுள்ளனர்.

இதன் கீழ், பின்வரும் சொத்துக்கள் மற்றும் பணம் தடைசெய்யப்பட்டு பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

03 பேருந்துகள்
02 கார்கள்
02 மோட்டார் சைக்கிள்கள்
மூன்று மாடி வீடு உட்பட 04 காணிகள்
50 பவுன் தங்கம்
ரொக்கமாக 123,000 ரூபாய் பணம்

இவ்வாறு தடை செய்யப்பட்ட சொத்து மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் 92 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT