இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 31 வயதான இலங்கை மாணவர், விபத்தில் உயிரிழந்துள்ளார். 31 வயதான ஓஷத ஜயசுந்தர என்ற பல்கலை மாணவர், வீதியில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் இவர் மீது மோதி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்து (13) இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பாக 27 வயதான காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனுக்கான உயர் ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம, மரணமான ஜயசுந்தரவின் பெற்றோருடன் தொடர்பு கொள்வதற்கு தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டார். சடலத்தை விரைவாக நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.