Friday, April 26, 2024
Home » சுங்கத்திணைக்கள அலுவலகத்திற்கு ‘இரும்பு பெட்டகம்’ அன்பளிப்பு
கட்டுநாயக்க விமான நிலைய

சுங்கத்திணைக்கள அலுவலகத்திற்கு ‘இரும்பு பெட்டகம்’ அன்பளிப்பு

மாணிக்கக்கல் வர்த்தக சங்கத்திற்கு பாராட்டு

by Gayan Abeykoon
December 21, 2023 8:17 am 0 comment

லங்கை சுங்கத் திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள அலுவலகத்திற்கு இலங்கை மாணிக்கக்கல் வர்த்தக சங்கம் சுமார் 15 இலட்சம் பெறுமதி வாய்ந்த ‘இரும்பு பெட்டகம்’ பாதுகாப்பு அலுமாறி ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளது.

கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக சம்பந்தமான மாணிக்கக்கல், நகைகள், கண்காட்சிக்குரிய மாணிக்க கற்களை பாதுகாப்பாக விமான நிலையத்தில் வைப்பதற்காக பாதுகாப்பு இரும்பு அலுமாறி பற்றாக்குறையாக காணப்பட்டது. இதனை நிவர்த்தி செய்யுமுகமாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பி.பி.எஸ்.சி நோனிஸ், விசேட திட்டப் பணிப்பாளர் கே.டி.சி சுமாநந்ததாச ஆகியோர் மாணிக்கக்கல் வர்த்தக சங்கதினருடன் நடாத்திய கலந்துரையாடலை அடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கலாநிதி முஸ்லிம் சலாஹுத்தீன் தெரிவித்தார்.

இதனை கையளிக்கும் நிகழ்வில் சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானக்க லியனகேயிடம் இலங்கை மாணிக்கக்கல் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி முஸ்லிம் சலாஹுத்தீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட சுங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

(அஷ்ரப் ஏ சமத்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT