96
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 155 எனும் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். மண்சரிவு காரணமாக மலையக ரயில் பாதை ஊடான சேவைகள் தாமதமாகலாம் என ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவுநேர தபால் ரயில் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டது.