அரநாயக்க திப்பிட்டிய அல் அரபா கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கல்லூரி அதிபர் கௌரவ.எம்.கே.எம். அனஸின் தலைமையில் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. சப்ரகமுவ மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசு வழங்கி கௌரவித்தனர்.
பிரதம அதிதியாக அரநாயக்க கோட்டக் கல்வி பணிப்பாளர் ,விசேட அதிதியாக சமூக சேவையாளரும்,வில்பொல ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருமான எம். யூ.எம்.பர்ஹான்,ஆசிரிய ஆலோசகர்களான யூ.எல்.ஐதுன்நிஸா,ஏ.சீ.எம்.முனவ்வர் மற்றும் அதிபர்களும்,ஆசிரியர்களும்,நலன் விரும்பிகளும்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும்,பழைய மாணவியர் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.