Saturday, April 20, 2024
Home » குடும்ப பாதுகாப்பு, சமூகப் பங்களிப்பு; அட்டாளைச்சேனையில் மாநாடு

குடும்ப பாதுகாப்பு, சமூகப் பங்களிப்பு; அட்டாளைச்சேனையில் மாநாடு

by Gayan Abeykoon
December 21, 2023 1:00 am 0 comment

‘குடும்ப வாழ்வின் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தலுக்கான சமூகப் பங்களிப்பு திட்டமிடல்’ எனும் தலைப்பின் கீழ் மாவட்ட மட்டத்தில் தெளிவூட்டும் மாநாடு, மனித எழுச்சி நிறுவனம் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை யாடோ விருந்தினர் விடுதியில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது வன்முறைகளால் பாதிப்படையும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் மனோநிலையை ஆற்றுப்படுத்தல், சிறுவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு, பெண் தலைமைத்துவ மற்றும் ஏழைக் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு, குடும்பப் பிணக்குகளை தீர்ப்பதற்காக நீதிமன்றம் செல்வோருக்கு ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

மனித எழுச்சி நிறுவனத்தின் மாவட்டப் பணிப்பாளர் கே.நிஹால் அஹமட் தலைமையில் இம்மாநாடு நடைபெற்றதுடன், இதில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT