புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபுக்கல்லூரியின் அதிபரும் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கலாசாலை விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் (முனீர் மௌலவி) இறையடிசேர்ந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
முனீர் மௌலவியின் மறைவு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“மறுமையில் எம்மை ஈடேற்ற உதவுவது இறைகல்வியே. மார்க்கத்தில் தெளிவு ஏற்பட்டு சிறந்த அமல்புரிய உலமாக்கள் எங்களுக்கு வழிகாட்டுகின்றனர். நேர்வழிகாட்டும் உலமாக்களின் இழப்பு சமூகத்தில் சமய நெறி, ஒழுக்க விழுமியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. இதற்காகத்தான் அரபுக்கல்லூரிகளை ஸ்தாபித்து உலமாக்களை உருவாக்கி வருகிறோம்.
இந்த வகையில், எதிர்கால உலமாக்களை உருவாக்குவதற்கு மர்ஹும் முனீர் மௌலவி பெருந்தொண்டாற்றினார். இஸ்லாஹியா அரபுக்கல்லூரி அன்னாரின் சிறந்த நிர்வாகத்தால் புகழின் உச்சிக்குச் சென்றுள்ளது. எம் சமூகத்தின் உயர் பெறுமானமாகத் திகழ்பவர் மர்ஹும் முனீர் மௌலவி. அன்னாரின் பிரிவால் துயருறும் சகலருக்கும் “ஷகீனத்” என்ற அமைதியை அல்லாஹுத்தஆலா நல்குவானாக!