Thursday, March 28, 2024
Home » கடந்த 24 மணி நேர அதிரடி நடவடிக்கை; 2,296 பேர் கைது

கடந்த 24 மணி நேர அதிரடி நடவடிக்கை; 2,296 பேர் கைது

- 184 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

by Prashahini
December 20, 2023 9:39 am 0 comment

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 184 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் தேடப்பட்ட சந்தேகநபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • ஹெரோயின் : 1 கிலோ 170 கிராம்
  • ஐஸ் : 648 கிராம்
  • கஞ்சா பொதிகள் : 126060
  • மாத்திரைகள் : 19,507

என்பன கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 2,166 சந்தேகநபர்கள் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT