Friday, March 29, 2024
Home » இந்தியாவில் கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் NIA சோதனை

இந்தியாவில் கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் NIA சோதனை

ISIS தொடர்புடையதாக 08 பேர் அதிரடி கைது

by gayan
December 20, 2023 6:10 am 0 comment

இந்தியாவின் கர்நாடகா உட்பட 04 மாநிலங்களின் 19 இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகக் தகவல் கிடைத்தது. இத்தகவலையடுத்து அந்த அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த வாரம் மகாராஷ்டிராவில் 40 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய

15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய முக்கிய தலைவர் என்பதும், அந்த அமைப்பில் புதிதாக சேர்பவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து வைக்கக்கூடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கர்நாடகா உள்பட 04 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் பெல்லாரி மற்றும் பெங்களூருவில் 11 இடங்களிலும் ஜார்க்கண்ட்டில் ஜாம்ஷெட்பூர் பொகாரோ ஆகிய 02 இடங்களிலும் மகாராஷ்டிராவில் அமராவதி, மும்பை, புனே ஆகிய 03 இடங்களிலும் டெல்லியில் ஓர் இடத்திலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன . இதையடுத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெல்லாரியைச் சேர்ந்த மினாஜ் என்கிற முஹம்மது சுலைமான் சையத் சமீர் பெங்களூரைச் சேர்ந்த மொஹம்மது முனிருத்தின் சையத் சமினுல்லா முஹம்மது முசாம்மில் மும்பையைச் சேர்ந்த அனாஸ் இக்பால் ஷேக் டெல்லியைச் சேர்ந்த ஷாயான் ரஹ்மான் எனும் ஹூசைன் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஷபாஸ் என்கிற ஜூல்பிகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT