Thursday, March 28, 2024
Home » ஐ.நா பாதுகாப்புச் சபை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

ஐ.நா பாதுகாப்புச் சபை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

by gayan
December 20, 2023 10:08 am 0 comment

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய (20) தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தில் உள்ள சில வார்த்தைகளுக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்ததையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது. தீர்மானத்தில் “போர் நிறுத்தம்” என்று குறிப்பிடப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்றது அமெரிக்கா.

“போர்க் காலத்தின்போது தற்காலிகச் சண்டைநிறுத்தம்” என்ற வார்த்தைகளை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இதனால் நேற்று முன்தினம் (18) காலை நடக்கவிருந்த வாக்கெடுப்பு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நகல் தீர்மானத்தை ஐக்கிய அரபு இராச்சியம் தாக்கல் செய்தது. அவசரமான, நீடித்த சண்டை நிறுத்தம் தேவை என்று தீர்மானம் கேட்டுக்கொண்டது. அந்த வாசகம் திருத்தியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீடித்த சண்டைநிறுத்தம், ஹமாஸ் மீண்டும் ஒன்றுசேர்வதற்கு வழிவிடும் என அமெரிக்கா குறிப்பிடுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT