தென்னிந்தியாவின் பிரபல நடிகரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான காலம் சென்ற எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு தினத்தை, மலையக கலை கலாசார சங்கம் (இரத்தின தீபம் அமைப்பு) நேற்று (17) கொண்டாடியது.
கண்டி வீர கெப்பட்டிப்பொல நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக பிரபல திரைப்பட நடிகர் ரிச்சட் ஜயக்கொடி, திரைப்பட தயாரிப்பாளர் பத்மசிரி கொடிகார, ஓய்வு நிலைப் பேராசிரியர் கலாநிதி துரை மனோகரன், கண்டி தமிழ் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் உற்பட பலர் கலந்துகொண்டு எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு விருதை வழங்கினர். மற்றும் பலர் இங்கு சான்றோர் கௌரவிப்பு விருதுகளையும் பெற்றுக் கொண்டனர்.
கண்டியைச் சேர்ந்த தமிழ் மொழி ஊடகவியலாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
அக்குறணை குறூப் நிருபர்