Saturday, April 20, 2024
Home » தரம் குறைந்த மருந்து; சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

தரம் குறைந்த மருந்து; சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

- வாக்குமூலம் வழங்க CID வந்த நிலையில் கைது

by Rizwan Segu Mohideen
December 18, 2023 4:42 pm 0 comment

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் குறைந்த ஹியுமன் இம்யூனோகுளோபுலின் (Human Immunoglobulin) ஊசி மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் (18) காலை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்த வந்திருந்த நிலையில் ஜனக சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு கலங்களின் கடுமையான பிரச்சினைகளுக்காக சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஒன்றாக ஹியுமன் இம்யூனோகுளோபுலின் காணப்படுகின்றது. இந்த நிலைமைகளில் நோயெதிர்ப்பு குறைபாடு, நாட்பட்ட பிரச்சினைகள் ஆகியன முதன்மையான பிரச்சினைகளாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT