Friday, April 19, 2024
Home » கிளிநொச்சியில் ரூ. 1 கோடி பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் ரூ. 1 கோடி பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

by Prashahini
December 17, 2023 5:19 pm 0 comment

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று (17) அமல் படுத்தும் வகையில் இத்திட்டம் தொடர்பாக நேற்று (16) மாலை பொலிஸ் மா அதிபர் அவர்கள் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

இவ் பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து இவ் குழுவின் ஊடாக இன்று (17) காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதலை மேற்கொண்ட போது சுமார் 68 கிலோவுக்கும் மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT