Thursday, April 18, 2024
Home » ஏறாவூர் பொலிஸ் பிரிவு வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் பலி

ஏறாவூர் பொலிஸ் பிரிவு வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் பலி

- வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது நடந்த விபரீதம்

by Prashahini
December 17, 2023 3:29 pm 0 comment

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று (16) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளார்.

ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அமீர்தீன் யாசிர் அறபாத் என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய், யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போது, தாயை எதிர்பார்த்து பஸ்தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன் ,தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதுண்டதால் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

பஸ்ஸின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுவனின் சடலம் 1990 விசேட அம்பியுலன்ஸ் மூலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். எம்.. நஸீர் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT