பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மரக்கலாகத்தை ஹேன பகுதியில் சீனன் கோட்டையைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் எம்.ஐ.எம்.பாக்கீர் அவர்களினால் சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் சீனன்கோட்டை மக்களினதும் 747ஏ மரக்கலாவத்த கிராம சேவகப் பிரிவு மக்களினதும் பூரண பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ நிலையம் மற்றும் பல்துறை கட்டிடம் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
மருத்துவ நிலையத்துடன் கிராம சேவை அதிகாரி அலுவலகம், சமுர்த்தி அதிகாரி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான அலுவலகம் என்பன கட்டடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் நீண்ட காலமாக இருந்து வந்த மருத்துவ நிலையம் இல்லாக் குறை இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. இக்கட்டடத்திற்கு சுமார் 90 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் பள்ளிச் சங்க உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பிரமுகர்கள் பலரும் பங்குபற்றினர்.