வடமாகாண ஆளுநர் தலைமையிலான கூட்டத்தில் தகவல்
வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, டெங்கு நிலைமை தொடர்பாக ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தில்
உரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற போது வடமாகாண டெங்கு நிலைமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. யாழ்ப்பாணத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தின் இதுவரையில் 3 பேர் உயிரிழந்ததுடன், 2,192 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னாரில் மிகக் குறைந்த டெங்கு நோயாளர்களே பதிவாகியதுடன், அம்மாவட்டங்களில் டெங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக, அந்தந்த மாவட்டச் செயலாலர்களும் சுகாதாரத்துறைசார் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
யாழ். விசேட நிருபர்