தோஹா ஃபோரம்-2023 இல் பங்கேற்பு
கட்டாரில் கடந்த 10ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை தோஹா ஃபோரம்-2023 இல் ‘பகிரப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற தோஹா மன்றத்தின் 21ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். கட்டார் பிரதமரும் கட்டார் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாஷிம்- அல் தானியின் அழைப்பின் பேரிலேயே அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தை மேற்கொண்டார். ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாஷிம்- அல் தானி, கட்டார் வெளியுறவு அமைச்சராகவும் உள்ளார். மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய உலக ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மேலும் பலமுனை உலகத்தால் பல துருவ உலகங்கள் உள்ள நாடுகளுக்கு வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் ‘பல்முனை சர்வதேச ஒழுங்கில் பிரிக்ஸ் அதிகரித்து வரும் செல்வாக்கு’ என்ற தலைப்பில் உயர்மட்ட பிரிவில் ஒரு குழு உறுப்பினராக அமைச்சர் அலி சப்ரி உரையாற்றினார்.