வழக்கம்போல் சிகிச்சைகள்
கொழும்பு தேசியகண் வைத்தியசாலை வேலை நிறுத்தம்நேற்று உடனடியாக இடைநிறுத்தப்பட்டது. சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவுடன் நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலைய டுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது. இதையடு த்து சிகிச்சைகள் வழமைபோல நடைபெற்றன.
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று (14) காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது நேற்றுக் (14) காலை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலே, வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.
வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதாக சுகாதார செயலாளர் தெரிவித்தார். கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபிக், பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஜி.பி.படவல மற்றும் கண் வைத்தியர்கள், வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் குழுவினர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.