ஜனவரி மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் வற் வரி 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இதனால், லிற்றோ எரிவாயு விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படுமென நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனவரியில் வரி அதிகரிக்கப்படவுள்ளதால்,
விரும்பியோ, விரும்பாமலோ லிற்றோ எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைவடையும் போது உள்நாட்டிலும் அதன் விலைகளை குறைப்பதற்கு லிற்றோ கேஸ் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது. அந்த வகையில் அரசாங்கத்தின் 18 வீத வற் வரி அதிகரிப்பால்,இதன் விலைகளிலும் அதிகரிப்பை மேற்கொள்ள நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்