Friday, March 29, 2024
Home » 20,000 கிலோ பெரிய வெங்காயம் பழுதடைந்த நிலையில் மீட்பு

20,000 கிலோ பெரிய வெங்காயம் பழுதடைந்த நிலையில் மீட்பு

by sachintha
December 15, 2023 6:00 am 0 comment

விலை அதிகரிப்பால் பதுக்கி வைத்ததாக தகவல்

விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்ட 20,000 கிலோ பெரிய வெங்காயம் பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டது. சீதுவை லியனகேமுள்ள பகுதியில் பொருட்களை களஞ்சியப்படுத்தும் மத்திய நிலையத்தில் இவை, பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. மூன்று கொள்கலன்களில் சூசகமாக இந்த வெங்காயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பொதுச்சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே இவை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. இவை, விற்பனைக்காக சந்தைக்கு கொண்டுவரப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT