நாடு முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் மின் விநியோகம் தடைப்பட்ட சந்தர்ப்பங்களில், ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் தெளிபடுத்துமாறும் கோரியுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி மின்சார சபையின் அதிகாரிகள், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி மாதம் வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.