135
கந்தளாய், சூரியபுர பிரதேசத்தில் பொதுவிடத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) ஈடுபட்டனர். பொதுவிடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டாமென்பதுடன், அவ்வாறு குப்பைகளை கொட்டுவதாக இருந்தால் ஓரிடத்தை தெரிவுசெய்து வேலி அமைத்து அறுக்கைப்படுத்தி அங்கு குப்பைகளை கொட்டுமாறும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இப்பொதுவிடத்தில் குப்பைகளைக் கொட்டுவதால் காட்டு யானைகளின் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அம்மக்கள் தெரிவித்தனர்.
கந்தளாய் தினகரன் நிருபர்