Friday, March 29, 2024
Home » முன்னாள் அமைச்சர் அஷ்ரபின் 75ஆவது பிறந்த தின நிகழ்வு
தேசிய ஐக்கிய முன்னணி ஏற்பாட்டில்

முன்னாள் அமைச்சர் அஷ்ரபின் 75ஆவது பிறந்த தின நிகழ்வு

by damith
December 11, 2023 11:10 am 0 comment

தேசிய ஐக்கிய முன்னணி ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பின் 75ஆவது பிறந்த தின கொண்டாட்ட நிகழ்வுகள் முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலியின் தலைமையில், நாளை (12) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க கலந்துகொள்ளவுள்ளதோடு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்நிகழ்வில் விசேட விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தமிழிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசபிரிய சிங்களத்திலும் உரையாற்றவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT