மண்முனை வடக்குப் பிரதேச நலன்புரிச் சங்கம் நடத்திய ஒளிவிழா வியாழக்கிழமை (07) பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அருட்தந்தை அன்னதாஸ் அடிகளார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அருட்பணி ராஜரெட்ணம் அடிகளார் பாலன் யேசுவின் பிறப்புத் தொடர்பில் சிறப்புரையாற்றினார். இதன்போது மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்