Home » 15 வயது சிறுமியின் சடலம் ஆற்றில் இருந்து மீட்பு

15 வயது சிறுமியின் சடலம் ஆற்றில் இருந்து மீட்பு

- மரணத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை

by Prashahini
December 10, 2023 11:54 am 0 comment

கொலன்ன தேர்தல் தொகுதி உல்லிந்துவாவ ஆற்றிலிருந்து 15 வயது பாடசாலை சிறுமியின் சடலம் இன்று (10) மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து பொதுமக்களின் உதவியுடன் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் க டந்த 8 ஆம் காணாமல் போனதாகவும், அதன் பின் நடத்திய தேடுதலின் போது இவரது சடலம் ஆற்றில் மிதந்து காணப்பட்டதாகவும், குறித்த சிறுமி அனில்கந்த தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் மாணவி எனவும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவர் நீராடச் சென்று ஆற்றில் மூழ் கி மரணமடைந்தாரா அல்லது வேறு காரணங்கள் இவரது மரணத்துக்கு காரணமா என்பது குறித்த விசாரணைகள் இடம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT