இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கந்தளாய் மத்திய கல்லூரியில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் கல்முறை ஸாஹிரா தேசிய கல்லூரி 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆடவர் பிரிவுகளில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
இதில் அந்த கல்லூரி வீரர்கள் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 1ஆம் இடத்தினையும், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 2ஆம் இடத்தினையும் பெற்றனர்.
அத்துடன் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று 17 வயதுப்பிரிவில் ஐ.எம். சம்லி சாஹி, எம்.இஸட்.எம். சானிப், ஏ.எஸ்.எம். மிஜ்வாத் மற்றும் 15 வயதுப் பிரிவில் ஐ.கே.எம். ஆக்கில் கான், எம்.ஜே.ஐ. சஹ்மி, ஏ.ஏ. பர்வீஸ் ஆகியோரும் Board Champion ஆக தெரிவு செய்யப்பட்டனர்.