சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை ஒரு வாரத்துக்குள் நாட்டுக்கு கிடைக்குமென நம்புவதாக அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி நடத்தப்பட்டால், நாடு இரண்டாவது கடன் தவணையை 12 ஆம் திகதி பெற்றுக்கொள்ளும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாம் தவணைக்கு உரிமை இல்லை என்றும், கடன் மறுசீரமைப்புக்கு நாடுகள் சம்மதிக்காது என்றும் சிலர் கருத்து தெரிவித்ததாகவும் அவர்தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி நடத்தப்பட்டால், நாடு இரண்டாவது கடன் தவணையை 12 ஆம் திகதி பெற்றுக்கொள்ளும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாம் தவணைக்கு உரிமை இல்லை என்றும், கடன் மறுசீரமைப்புக்கு நாடுகள் சம்மதிக்காது என்றும் சிலர் கருத்து தெரிவித்ததாகவும் அவர்தெரிவித்தார்.