Thursday, March 28, 2024
Home » வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை

- மூன்று பொலிஸ் சாட்சி உள்ளிட்ட 5 சாட்சியங்கள் நேற்று பதிவு

by Prashahini
December 6, 2023 2:30 pm 0 comment

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று (05) தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

அந்நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது , நவம்பர் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் பொலிஸ் நிலையத்தில் கடையாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூன்று பொலிஸ் சாட்சியங்கள் தமது சாட்சியை பதிவு செய்தன.

அத்துடன் உயிரிழந்த இளைஞனின் சகோதரி மற்றும் உயிரிழந்த இளைஞன், அவருடன் கைதான இளைஞன் ஆகிய இருவருடன், பிறிதொரு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, ஒரே சிறைக்கூடத்தில், தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞனும் மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தனர்.

அதனை அடுத்து வழக்கினை நாளை மறுநாள் (08) நீதவான் ஒத்திவைத்தார்.

அதேவேளை அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT