நாட்டுக்கு வரும் உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த மூன்றரை வருடங்களின் பின்னர் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திலே அதிகளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
இம்மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 51ஆயிரத்து 496 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்ததாக அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே, எண்ணிக்கையிலானோர் கடந்த 2020 பெப்ரவரியில் வருகை தந்தனர்.
அதேவேளை, இவ்வருடத்தின் கடந்த 11 மாதத்தில் சுமார் 13 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்ததாகவும் பெப்ரவரியில் 1,276, 951 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்