Thursday, April 25, 2024
Home » தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையை இன்று கடக்கும் மிக்ஜம்

தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையை இன்று கடக்கும் மிக்ஜம்

- சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்ப்பு

by Prashahini
December 5, 2023 8:37 am 0 comment

– நாட்டின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை

மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது நேற்றிரவு (04) 11.30 மணிக்கு வட அகலாங்கு 14.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.30 E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்காக ஏறத்தாழ 520 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

அது மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதி வடக்குத் திசையில் நகர்ந்து இன்று 11.30 மணியளவில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, “MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியால் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் வடமேல், வட மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில், குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானதுதென்மேற்குதிசையிலிருந்துவீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாபத்திலிருந்துமன்னார்மற்றும்காங்கேசந்துறை ஊடாகதிருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும்ஹம்பாந்தோட்டையிலிருந்துபொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
சிலாபத்திலிருந்துமன்னார்மற்றும்காங்கேசந்துறை ஊடாகதிருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்துபொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போதுகொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT