Friday, April 19, 2024
Home » யாழ். நகரில் இளையோரை குறிவைத்து போதை விருந்து

யாழ். நகரில் இளையோரை குறிவைத்து போதை விருந்து

ஒருபோதும் ஏற்க முடியாது என்கிறார் சுகாஷ்

by gayan
November 16, 2023 6:28 am 0 comment

யாழ். நகரில் இளைஞர்களை குறிவைத்து அரங்கேற்றப்படும் போதை விருந்து, களியாட்டங்களை ஒருபோதும் ஏற்கமுடியாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற

களியாட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் வெளியிட்டுள்ள “X” தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

யாழ். நகரில் இளையோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட போதை விருந்து களியாட்டத்தை ஒருபோதும் ஏற்கமுடியாது. குறித்த தனியார் விடுதியும் சமூகப் பொறுப்பற்றுச் செயற்படும் ஏனைய ஒருசில விடுதிகளும், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கோலங்களுக்கு அமைவாகச் செயற்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான போதை வெறியாட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி போதை மையங்களை முற்றுகையிட வேண்டி ஏற்படலாமெனவும் அவரது பதிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT