151
மஹியங்கனையில் தெரிவு செய்யப்பட்ட விசேட உதவி தேவைப்படும் சிறுவர்களுக்கு சர்வதேச அப்துல் கலாம் அறக் கட்டளையால் பல்வேறு உதவிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (06) வழங்கி வைக்கப்பட்டன.
மீகஹகியுல ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள விசேட உதவி தேவையுடைய பலர் கலந்துகொண்டனர். கண்டியை தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச அப்துல் கலாம் அறக் கட்டளையின் இலங்கைக் கிளைத் தலைவர் என்.கருணாகரன், செயலாளர் எம்.எஸ்.எம்.ஐஹதர், சட்ட ஆலோசகர் எச்.பி.விஜேதுங்க உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
அக்குறணை குறூப் நிருபர்