317
கல்முனை சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்ற 46 வயதுக்கு மேற்பட்ட பழைய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘ஸஹ்றியன் லெஜென்ட் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் தொடரில் சம்பியன் கிண்ணத்தை லெஜண்ட் 96 பவர் பிளேயர்ஸ் அணி கைப்பற்றியது.
பவர் பிளேயர்ஸ் சஹிரியன் 96 அணியின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிறன்று (5) நடந்த இறுதிப் போட்டியில் லெஜண்ட் 90 அணியையே லெஜண்ட் 96 அணி வீழ்த்தியது. இந்தத் தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன.
பெரியநீலாவணை விசேட, கல்முனை மத்திய தினகரன் நிருபர்கள்