Saturday, April 20, 2024
Home » மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் பலி

- நேருக்கு நேர் மோதிய ஹயஸ்ரக வாகனத்தின் சாரதி கைது

by Prashahini
November 7, 2023 4:18 pm 0 comment

ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் நேற்று (06) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெடுங்கேணியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கி சென்ற ஹயஸ்ரக வாகனமும், ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து நெடுங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஒலுமடு நெடுங்கேணி பகுதியை சேர்ந்த 37 வயதுடைய பழனியாண்டி தியாகராசா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பாக ஹயஸ்ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஓமந்தை விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT