215
கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் மூன்றை நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (06) நியமனங்களை வழங்கினார். இந்நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல,வீரசிங்க, அதாவுல்லா, அலிஸாஹிர்மௌலானா,பிரதம செயலாளர் ஆர்,எம்,கே,எஸ், ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.