Home » பிரதமர் – முன்னாள் எம்.பி சந்திரகுமார் சந்திப்பு

பிரதமர் – முன்னாள் எம்.பி சந்திரகுமார் சந்திப்பு

by damith
November 7, 2023 8:53 am 0 comment

வடக்கில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வடக்கில் வனவளதிணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணி மற்றும் விவசாய நிலங்கள், வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடிநீர் விநியோக திட்டங்களின் போது ஏற்படுகின்ற தடைகள், உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீதிகளை விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்க வேண்டிய தேவைகள், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நிலவுகின்ற வளப் பிரச்சினைகள் என்பன தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு சந்திரகுமாரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்விடயங்களை கேட்டறிந்துகொண்ட பிரதமர் சில விடயங்கள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துவதாகவும், ஏனைய விடயங்களில் எதிர்காலத்தில் கவனம் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT