Thursday, March 28, 2024
Home » வட மாகாணத்தில் புதிதாக 401 அதிபர்கள் நியமனங்கள்

வட மாகாணத்தில் புதிதாக 401 அதிபர்கள் நியமனங்கள்

அமைச்சர் டக்ளஸ், ஆளுநர் சார்ள்ஸ் தலைமையில் நிகழ்வு

by damith
November 6, 2023 7:00 am 0 comment

வட மாகாணத்தில், அதிபர் தரத்துக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அண்மையில் (04) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. வட மாகாணத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கே இவர்கள் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்களுடன் வட மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT