Tuesday, March 19, 2024
Home » வெள்ளவத்தை கடற்கரையில் ஒதுங்கிய தமிழ் இளைஞனின் சடலம்

வெள்ளவத்தை கடற்கரையில் ஒதுங்கிய தமிழ் இளைஞனின் சடலம்

- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என அடையாளம்

by Rizwan Segu Mohideen
November 5, 2023 12:16 pm 0 comment

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலமொன்று வெள்ளவத்தை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

இன்று (05) காலை வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைய, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 28 வயதான, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனன் உடலில் சிவப்பு தழும்புகள் காணப்படுவதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT