187
ரயில்வே பொது முகாமையாளராக பதவி வகித்து வந்த டபிள்யூ.டி.எஸ்.குணசிங்க ஓய்வு பெற்றுச் சென்றுள்ளமையால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிய ரயில்வே பொது முகாமையாளராக எம்.கே.டபிள்யூ.பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்,
ரயில்வே தொழிற்சங்கங்களின் இணக்கப்பாட்டுடன், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கமைய, அமைச்சரவை அங்கீகாரத்துடன் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன முன்னிலையில் தனது கடமைகளை நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.