200
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடு செய்ய விரும்பினால், 118 எனும் இலக்கத்தினூடாக முறைப்பாடு செய்யலாமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் இந்த தொலைபேசி இலக்கம் கையாளப்பட்டு வருவதுடன், இந்த எண்ணுக்கு பொதுமக்களிடமிருந்து வரும் அழைப்புகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுமெனவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.