200
உடவளவை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அம்பலாந்தோட்டை வளவை ஆற்றின் இரு கரைகளிலும் வசிப்பவர்களையும் ஆற்றை பயன்படுத்துபவர்களையும் மிகவும் அவதானமாக இருக்குமாறு, அம்பாந்தோட்டை நீர்ப்பாசன பொறியியலாளர் மாலா சமரக்கொடி கேட்டுக்கொண்டார். மூன்று வான்கதவுகளும் தலா ஓர் அடிக்கு திறக்கப்பட்டுள்ளதால், சுமார் 13,000 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு வளவை ஆற்றில் விடப்படவுள்ளது.
எனவே, வளவை ஆறு கடலில் கலக்கும் அம்பலாந்தோட்டையை சுற்றியுள்ள தாழ்வான இடங்களில் திடீரென அனர்த்தம் ஏற்படலாமெனவும், அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்