417
கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் தொடர்புடைய வழக்கிலிருந்து நாமல் ராஜபக்ஷ உட்பட சகல பிரதிவாதிகளையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு, இந்நிறுவனத்தினூடாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் 30 மில்லியன் ரூபாவை முறைகேடாக ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.