Thursday, March 28, 2024
Home » ‘நாம் 200’ நிகழ்வில் பங்கேற்க இந்திய நிதி அமைச்சர் இலங்கை விஜயம்

‘நாம் 200’ நிகழ்வில் பங்கேற்க இந்திய நிதி அமைச்சர் இலங்கை விஜயம்

- ஜீவன், செந்தில் தலைமையிலான பிரமுகர்கள் வரவேற்பு

by Prashahini
November 1, 2023 10:37 am 0 comment

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாம் 200’ நிகழ்வு நாளை (02) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வானூர்தி ஊடாக கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவதுடன், இன்று (01) மாலை திருகோணமலைக்கு செல்லவுள்ளமை குறிப்பித்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT