Friday, March 29, 2024
Home » ரூ. 1 1/2 இலட்சம் பெறுமதியான பூனை திருட்டு; சந்தேகநபர்கள் கைது

ரூ. 1 1/2 இலட்சம் பெறுமதியான பூனை திருட்டு; சந்தேகநபர்கள் கைது

by Prashahini
November 1, 2023 10:14 am 0 comment

1 1/2 இலட்சம் ரூபாய் பெறுமதி மிக்க “அமெரிக்கன் பொப்டெயில்” பூனை ஒன்றை களவாடிய குற்றத்திற்காக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி கொடிகம்முவ பிரதேசத்தில் வசிக்கும் தந்தைக்கும், மகளுக்கும் வெளிநாட்டு உல்லாச பயணி ஒருவர் பரிசாக வழங்கிய இந்த பூனையே திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உல்லாச பயணி வழங்கிய இந்த பூனை குட்டி சில நாட்களில் பக்கத்தில் வசிக்கும் நபரினால் திருடப்பட்டுள்ளதாகவும், வீட்டின் முன்னால் அரச நிறுவனத்தின் வாகனம் ஒன்றின் மூலம் இந்த பூனை களவாடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு புகார் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகரான பிரசன்ன, உதவி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ஆகியோர் சந்தேக நபர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பலாங்கொடை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT