261
தினேஷ் ஷாப்டரின் மரணத்துக்கான காரணம் இன்று புதன்கிழமை (01) அறிவிக்கப்படுமென கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தார்.
பிரபல தொழிலதிபரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக பல்பக்க விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில்,உரிய சாட்சியங்களின் அடிப்படையில் மரணத்துக்கான காரணம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (31) சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி தினேஷ் ஷாப்டரின் சந்தேகத்துக்குரிய மரணத்துக்கான காரணம் இன்று (01) அறிவிக்கப்படவுள்ளது.