மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கரவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவையே மின் கட்டணத்தை திருத்தம் செய்யும் நடைமுறை இருந்தது. இதனை 03 மாதங்களாக குறைப்பதற்கான யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை, பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கவனத்தில் கொண்டு மேற்படி காலத்தை 03 மாதங்களாக திருத்தம் செய்துள்ளதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க இனி 03 மாதத்திற்கு ஒரு முறை, மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்)